நான் மிக
ரகசியமாக
வைத்துக் கொள்ளுகிறேன்
தெரிந்தால்
என்னை விட்டு
போகுமா என்ன
நலம் விசாரிப்பது
நீ
எனத் தெரிந்தால்
காய்ச்சல்..!
நீ
எப்படி
இருக்கிறாய்
என்று மட்டும்
கேளடி என் கண்மணி
தலை வலி
எப்படி இருக்கிறது
என்று கேட்காதே
குதூகலமாகிவிடுகிறது
தலைவலிக்கு..
_ வெள்ளத்துரை