திசையறியா
பட்டாம்பூச்சிகளாய்ப்
படபடக்கிறோம்
நீயும் நானும்
ஞாயிற்றுக்கிழமைகளின்
சிலந்திகளாய்
மாட்டிக்கொண்டபடி
ஆகச்சிறிய
உயிருக்கும்
ஆகச்சிறந்த
வாழ்க்கை இருக்கிறதடி
தடையாயிருக்கும்
மடையை உடைத்தால்
இல்லம் சிரிக்கும்
நிறைந்த விளைச்சல்
*பொன்.இரவீந்திரன்*