Header Ads Widget

Responsive Advertisement

விதவையின் வாழ்வு..


துடுப்பில்லா
படகைப் போல்
எவ்விடம் சென்று
சேருமென அறியா..

பாதுகாப்பில்லா
பயணத்தில்
தனிப்பயணி
தவிப்புகளோடு
நகரும் வாழ்க்கை பேருந்தில்..

தஞ்சம் புகும் 
உறவுகள் 
சில
வஞ்சம் தீர்க்கும்
மிருகங்கள் 
பல..

வாழவே மறுத்து
பல நாள்களை
வெறுத்து ஒதுக்கிய
வஞ்சியின் 
வாழ்வு 
காய்ச்ச மரம் கல்லடிபடும்
என்பதை விட
சொல்லடி படும்..

உண்மையோடு வாழ்வதை 
ஊருக்கு
உரக்க சொல்ல மனமிருந்தும்
நம்பிக்கையில்லா
உலகில்
தன் வாழ்வை மறக்கவும் மரிக்கவும் துணிந்துவிட்ட
மாங்கல்யம் இல்லா
மங்கை
தம்கையென
பிடித்திழுக்காமல்
தங்கையென
தாங்கிப்பிடியுங்கள்..

புண்ணியம்
பிறவிப் பயனடைவீர்..

கரிகாலி.கவி. பெ.கருணாநிதி.