நான்கு பேர் ஒருபுறம் ஆட்டுவிக்க
நான்கு பேர் மறுபுறம் இசைதொடுக்க
ஒருவர் கதைதனை ஒப்புவிக்க
பொம்மைகள் மாந்தராய் ஆடிநிற்க
பலபேர் கூடிநின்று ஊக்குவிக்க
சரித்திரமும் புராணமும் கதைகளாக
கருத்துகேட்கப் பலபேர் காத்திருக்க
சமூக அவலங்கள் காட்சியாக
தோல்பாவை மரப்பாவை பொம்மலாட்டம்
தமிழினத்தின் குரலானது பொம்மலாட்டம்.
எங்கிருந்தோ யார்யாரோ ஆட்டிவைக்க
பலனுக்காய் பலபேர்கள் ஆடிநிற்க
உதவிக்காய் சிலபேர்கள் கூடிநிற்க
உரிமைக்காய் ஊரார்கள் குரல்கொடுக்க
அவர்களை எடுபிடிகள் பழித்து நிற்க
ஒரு நாளுக்காய் அனைவருமே காத்திருக்க
சரித்திரத்தை தெரிந்தவர்கள் தவித்து நிற்க
நடக்கிறது இன்றும் பொம்மலாட்டம்
ஒன்றுமட்டும் அன்றில் நின்று வேறுபட்டு
பாத்திரங்கள் பொம்மையல்ல மனிதர் மட்டும்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி.*