Header Ads Widget

Responsive Advertisement

சொல்லத் துடிக்குது மனசு



எத்தனை காலம்.....

எத்தனை காலம் காத்திருந்தேன் நான்

உந்தன் வருகையைப் பார்த்திருந்தேன் நான்

வழிமேல் விழிநட்டுப் பூத்திருந்தேன் நான்

உன் வாயால் உன் பதிலை எதிர் பார்த்திருந் தேன்நான்.


ஏக்கத்தில் தூக்கத்தைத் தொலைத்திருந்தேன் நான்

நோக்கத்தில் உன்னையே கொண்டிருந்தேன் நான்

ஊக்கத்தில் உன் நினைவைப் பூண்டிருந்தேன் நான்

அதன் தாக்கத்தில் என்னையே மறந்திருந்தேன் நான்.


சக்கரத்தைப் பாதத்தில் வைத்திருந்தேன் நான்

இறக்கை கட்டி வானிலே பறந்திருந்தேன் நான்

சொர்க்கத்தில் மிதப்பதாய் நினைத்திருந்தேன் நான்

தூக்கத்தில் கூட விழித்திருந்தேன் நான்.


அயல்நாட்டில் இருக்கலாம் அயலூரில் இருக்கலாம்

ஏதோ ஒரு ஊரில் என்றாவது ஒரு நாள்....

என்றாவது ஒரு நாள் உன்னைப் பார்க்கையில்....

உன்னை மட்டும் தனிமையில் பார்க்கையில்

காத்திருந்த சேதியை, பார்த்திருந்த நாட்களை

சொல்லத் துடிக்குது மனசு

சொல்லி விலகிடத் துடிக்குது மனசு

அந்த நாளுக்காய் தவிக்குது மனசு.


*சுலீ. அனில் குமார்*

*கே எல் கே கும்முடிப்பூண்டி.*