✍கதிரறுக்க போகயில
களையெடுக்க போகயில
கருவாயிருந்த நா
கறுப்பாயிடுவேன்னு
கருத்த உன்வயித்துக்கு
கந்தலுல பந்தலிட்டு
கருகாம காத்தவளோ..
✍கஞ்சி கெடக்காம
காஞ்சிபோன காலத்துல
எங்கப்பன் செய்யலன்னு
உங்கப்பன
ரேசனரிசி கேட்டு
ரோதன செஞ்சவளோ..
✍ஒண்ணாந்தேதி
வரப்போற
ஓடம்போறப்புக்கு
கடனா வாங்குன
வெதநெல்ல
வேகவைக்க
வேணுமுன்னு
எங்கப்பன் வேண்டுமுன்ன
பதமான வெதநெல்ல
பச்சரிசி சோராக்கி
அயரமீனோட
அய்யனாருக்கு
படயலிட்டு
அடிவயிர தடவி
அப்பவிட்டாலென்ன
ஆத்தாயிருக்கேன்னு
ஆருதலு சொன்னவளோ..
✍'கைநாட்டா'ன்னு
கணக்கெடுக்க
வந்தவக ஏளனமா
கேட்டாகன்னு
'இங்கிலிசு படிசுபுட்டு
எம்புள்ள
கவுருமன்டு கலக்டராவான்'னு
சந்திவீரன் சாமி
சாம்பளபூசி
சத்தியசெஞ்சவளே..
✍ஆத்தாளுக்கு ஒருநாளு
*அன்னையர் தின* முன்னு
அகிலம் கொண்டாடுது.
ஒறக்கங்காணாது
ஓருயிரு தீண்டாது
ஓயாம காத்தவளே
ஒருநாளு போதுமா?
ஓராயிரம் சென்மம்
வேணுமே
உம்பேரு
சோல்ல...
🙏த.தாஸ்🙏
அ.உ.நி. பள்ளி,
அனுப்பம்பட்டு.