பூவினைத் தவையி ல்
சூடினாள்!
பூவளந்த மேனியாளின் தலையிலே ஏறியதால் அப்பூ
அதன்இனத்தோடு தான் சேர்ந்ததாகப் பெருமிதமுற்றது.
முத்துமாலையை கழுத்திலே அணிந்தபோது
அவள்முகத்திலே அதரங்களின் புன்னகையினூடே
தெரிந்த பற்களைக் கண்ட முத்துகளெவ்லாம்
தாங்களும் தங்களினத்தோடுச் சேர்ந்ததாக மகிழ்வுற்றன!
செம்பவள மோதிரத்தை விரலில் அணிந்தபோது அவள் கைவிரல்களின் நகங்களைக் கண்ட செம்பவளமும்
தன் இனத்தோடு சேர்ந்ததென்று கர்வமுற்றது.
அவள் நடைபயில்கையில்
அவளைத் தழுவிய
தென்றலும் அவளின் நடையில் தன்னை இழந்து
அதன்இனத்தோடு
இணைந்ததாக மகிழ்வுற்றது!
இவ்வாறே
ஒவ்வொரு இனமும் அவளைத் தம்மினமாய் உரிமை கொண்டாடியபோது
அவளின் பெண்மனதோடு எப்போது இணைவோம் என்று அவள்விழியால் தாக்குண்டு காதலிலே வீழ்ந்த ஆண்மனம் ஏங்கியது!
த.ஹே
கோளூர்