எல்லையில்லா பெருமையுடன் எல்லைகாக்கச் சென்றீர்கள்,
தொல்லையிலா வாழ்வதனை நாம் வாழ விழைந்தீர்கள்.
நாங்கள் இங்கு உறங்குதற்கு உறங்காமல் விழித்தீர்கள்,
நாங்கள் இங்கு வாழ்வதற்கு வாழாமல் வாழ்ந்தீர்கள்.
எம் தேசம் சிதறாமல்,
எம் மக்கள் பதறாமல்,
எம் பெண்கள் கதறாமல் இருப்பதற்காய் சிதறினீர்கள்.
அன்னை நாட்டைக் காக்கையிலே,
அணிவகுத்துச் செல்கையிலே, அன்னியனின் சூழ்ச்சியிலே
இரத்தத்தைச் சிந்தினீர்கள்.
நீ சிந்திய இரத்தம்
அது இந்திய இரத்தம்,
அதை நினைக்கும் போதோ
கொதிக்கிறது இரத்தம்,
அது தூங்கவிடாமல் எமை வைக்கும் நித்தம்,
விரைவில் கேட்கும் அவன் அலறல் சத்தம்,
எமைத் தூங்க வைக்கும்.....
எமைத் தூங்க வைக்கும்
அந்த அலறல் சத்தம்.
*சுலீ. அனில் குமார்*
*கே எல் கே கும்முடிப்பூண்டி*