Header Ads Widget

Responsive Advertisement

உயிரில் கலந்த சொல்

விலக்குச்

சாலையிலிருந்து

பயணிக்கும்

சிற்றூரின்


ஒற்றையடிப்

பாதையாய்க்

கிடக்கிறதென்

வாழ்க்கை


தொலைதூரக்

குடிசையில்

ஒளிரும் 

சிம்னி விளக்காய்

நம்பிக்கையூட்டும் 


உயிரில்

கலந்த

உந்தன் 

மாமா

என்னும் சொல்


*பொன்.இரவீந்திரன்*