Header Ads Widget

Responsive Advertisement

நிலா


மாலை மயங்கும் நேரத்திலே

இருள் சூழும் வேளையிலே

மலர்கள் மலரும் வாசத்திலே

ஊரடங்கும் பொழுதினிலே

கீழ்வானம் மீதினிலே

அமைதியான முகத்துடனே

வெள்ளையன் ஒருவன்

கால்கள் இல்லாமல் ஓடி வந்தான்

கைகளில்லாமல் தவழ்ந்து வந்தான்



பூமியில் இருளை நீக்கிவிட்டு

மக்களின் மனதில் இன்பத்தை கூட்டிவிட்டு

திருட்டுத் தொழிலை ஒழித்துவிட்டு

மனிதருள் இரக்கத்தை விதைத்து விட்டு

இலக்கியங்களில் கதாநாயகனாகி விட்டு

குழந்தைகளுக்கெல்லாம் அம்புலி ஆகிவிட்டு


பார்க்கும் போதே கண்ணைக் கவரும் 

அழகும் பெற்றுவிட்டு

பட்டும் படாமல்

தொட்டும் தொடாமல்

அல்லியை கண்டு விட்டு

அழகாக யாருக்கும் தொல்லையின்றி மேற்கில் மறைகின்றான்


அவனைப் போல நாமும்

நல்லன செய்து அமைதியாய் இருப்போம்


தி.பத்மாசினி