Header Ads Widget

Responsive Advertisement

எண்கள்

சுழியம் தொடங்கி ஒன்பது வரை

உலகை ஆட்டிப் படைக்கும் எண்களே!

உங்களை அறியாமல் இங்கே

யாரும் வாழ்ந்ததில்லை!

நீங்கள் இல்லையேல் எங்களுக்கு கணிதம் இல்லை!

படித்தவர் படிக்காதவர் பேதமின்றி யாவராலும் அறியப்படும் எண்களே!வாழ்க்கையைச் செம்மையாக்கும் மந்திரக்கோல்களே!

கருவறையில் உயிர்கள் வாசம்செய்வது முதல்தொடங்கி

மண்ணறை செல்வதுவரை

எல்லாமே கணக்குதான்!அந்த கணக்கெல்லாம் எண்கள்தான்!

எங்கள் உடலமைப்பிலும் புறத்திலும் அகத்திலும் உறுப்புகள் அமைவதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான்!

மரபுப் பண்புக்குக் காரணமான குரோமோசோம்கள்

அமைவதும் குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான்!

எண்களே நீங்கள்தான் எங்களை ஆட்டிப்படைக்கும் வல்லரசுகள்!


த.ஹேமாவதி

கோளூர்