Header Ads Widget

Responsive Advertisement

நம்பிக்கைச் சுடர்

முகமென்ற அகலில்

புன்னகையென்ற

தீபத்தை ஏற்றிட

ஆசைதான் இங்கு

யாவருக்கும்!

காற்றால் அணைந்த தீபங்களானோம்!

தென்னம்பிள்ளைகளை

இழந்தே மக்களில்லா பெற்றோரானோம்!

பயிர்களை இழந்தோம்!இல்லை உயிர்களை இழந்தோம்!முகமென்ற அகலிருக்க புன்னகையென்ற

தீபம் ஏற்ற இயலாதநிலையில்

இருக்கிறோம்!

ஆனாலும் மீண்டும்

இழந்ததைப் பெறுவோம்!என்ற

நம்பிக்கைச் சுடரை

எங்கள் நெஞ்சத்தில்

வைத்திருக்கிறோம்!

🎇🎇🎇🎇🎇🎇🎇

த.ஹேமாவதி

கோளூர்