முகவரி இல்லா கடிதங்கள் உரியரிடம் போய் சேர்வதில்லை!

முகவரி இருந்தும்

சிலருக்குக் கடிதங்களே வருவதில்லை!

போகக் கூடாத முகவரிகள்!

போகவேண்டிய முகவரிகள்!

காணாமல்போன முகவரிகள்!

இல்லவே இல்லாத

முகவரிகள்!

தப்பான முகவரிகள்

என்று முகவரியில்தான் எத்தனை எத்தனை வகைகளுண்டு!

மனமே கேள்!

நம் வாழ்வும் ஒருகடிதமே!அதை

உரிய முகவரியில்

அனுப்பினால்தான்

முடிவில் இறையென்ற ஊரைச் சேரலாம்!

எளிதில் யாராலும் மறக்க முடியாத முகவரிஇது!

உலகின் எந்தமூலையில் இருந்தாலும் அனைவருக்கும் இது ஒன்றுதான் நிரந்தர முகவரி!

மாற்றமில்லாதது இது!நல்லவனாய் உன்னை மாற்றுவது இது!

மூன்றெழுத்தாலனது

இது!

அதுதான் *அன்பு* என்ற முகவரி!

அன்பென்ற இம்முகவரியைத் தேடிச் சென்றால்

வாழ்வில் எல்லாம் அடையலாம்!தெய்வமாகவும் ஆகலாம்! இறுதியில் இறையிடம் கலக்கலாம்! இந்த முகவரியை வெளியில் தேடுவதை நிறுத்தி உன்னுளிருந்தே தேடு!

உன்னுள்ளே அன்பைச் சுரந்து மற்றவர்க்கு வழங்கு!

பிறருக்கு நீ ஆகு அன்பின் முகவரியாய்!

இந்த அன்பொன்று மட்டுமே இருந்துவிட்டால் போதும் இந்த உலகையே வென்று விடலாம்!

உன்னுள் அன்பிருந்தால்தான்

உன்னால் பிறரின் அன்பைப் பெறமுடியும்!


*த.ஹேமாவதி*

*கோளூர்*