Header Ads Widget

Responsive Advertisement

மௌனித்தல்... அத்தனை எளிதல்ல..!



உனக்குப்
பிடித்தவர்களிடம்
ஓரிரு நாட்கள்
மௌனமாயிருந்து பார்...

உலகம் சூன்யமாய்த் தெரியும்,
சிட்டுக்குருவியின் கொஞ்சலும்
பேரிரைச்சலாய்க் கேட்கும்.

பக்கத்தில் பேசிக்
கொண்டிருப்பவர்களை
'கொஞ்சம் சும்மா இரேன்' என்று
கடிந்து கொள்ளத் தோன்றும்.

நான்காவது பாட்டுக்குமேல்
இளையராஜாவையே கொஞ்சம்
தள்ளி வைப்பாய்...

பிடித்தவர்கள்
உன்னிடம் மௌனிக்கட்டும்...
பிரபஞ்சமே அமைதியாய்
உணர்வாய்...

யார்பேச்சும்
செவிகளில் விழாது...
தியான நிலையிலேயே
இருப்பாய்...
உன் பெயர் சொல்லி
அழைத்தாலும்
யாரோவென கடந்து போவாய்...

சாலையில்
ஹாரன் ஒலி எழுப்பி
வாகனத்தை நிறுத்தி
திட்டிச் செல்பவனை
காரணம் புரியாமல்
கடந்து வருவாய்....

*மௌனித்தல்...*
*அத்தனை எளிதானதல்ல...!*