முரண்டு பிடிக்கும் மனிதன்கண்ணில் பட்டதெல்லாம் இரண்டிரண்டு,
சிவன் என்போம் சக்தி என்பார்.
பக்தி என்போம் பயம் என்பார்.....
மனித மனம் கேட்டிடாது ஒன்றென்னும் மெய்யை, மனதுக்குள்ளே வளர்த்துவிடும் இரண்டு என்னும் பொய்யை.
குலசாமிக்கு பூஜை செய்வார்_மறந்திடாது. ஆசாமிக்கும் உண்டங்ேக பெரும் படையல்.....
குரங்குபோல மரம் தாவும் இரட்டைமனம்,
அதைவிட்டிடாது பிடித்து வாழும்மனித குணம் ,
மதியோடு வென்றாலும் சதி என்பாரிங்கே ,
சதிவென்றாலும் கொண்டாடி சாதனை என்பாரே .....
கண்ணிரண்டில் காட்சி ஒன்று தானே ,
காது இரண்டில் ஒலிகள் ஒன்றுதானே ,
இரட்டைகுழல் மூக்கினிலும் சுவாசம் ஒன்றுதானே,
மனமேஒன்றாக ஒன்றிவிடு ஓருயிர் தானே .....
*கவிஞர் ராஜா ஆ*
*ஒருங்கிணைப்பாளர்*
*பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கம் .*