********************************
தேகம் தீண்டா காதல் வேண்டும்
தேவை அறியும் நட்பு வேண்டும்
கள்ளமில்லா உறவு வேண்டும்
எல்லை இல்லா அன்பு வேண்டும் ,,,
புரிதல் கொண்ட இதயம் வேண்டும்
தெளிதல் கொண்ட காட்சி வேண்டும்
உண்மை இங்கு உணர்ந்திட வேண்டும்
பொய்மை இங்கு புறனே வேண்டும் ....
பசிப்பிணி இங்கே பறந்திட வேண்டும்
பகுத்தறிவு இங்கே செழித்திட வேண்டும்
சோழன் ஆந்தை நட்பு வேண்டும்
சோர்வு இங்கு சோர்ந்திட வேண்டும் ,,,,,
மழலை இயல்பில் மகிழ்ந்திட வேண்டும்
குழலின் இசையில் குலவிட வேண்டும்
நிலவின் தண்ணொளி நிதமும் வேண்டும்
நீல மேகம் நிறைந்திட வேண்டும் ,,,,
இறையை இங்கு நெருங்கிட வேண்டும்
கலங்கிய இதயம் மலர்ந்திட வேண்டும்
கயமைகள் இங்கு கலைந்திட வேண்டும்
கமலவன் அருள் புரிந்திட வேண்டும்
பட்டுதாவணி சரசரக்க வேண்டும்
கற்பில் சிறந்த அணங்கைகள் வேண்டும்
காதல் நிறைந்த காளைகள் வேண்டும் ,,,
இருமணம் இணையும் திருமணம் வேண்டும் ..,,
சொம்பில் தீர்த்தம் சுகமாய் வேண்டும்
அனிச்சமென விருந்து வேண்டும்
அகம்மலர அன்பு வேண்டும்
என் கனவுகள் மெய்ப்பட வேண்டும் ,,,,,,
தாமரை ரவி பவானி