Header Ads Widget

Responsive Advertisement

கனவு - ஹேமாவதி



வாசல் இல்லா வீடேது?               கனவு காணா மனிதனேது?
பகலும் இரவும் தானே நாளாகும்!
கனவும் நனவும்
தானே வாழ்வாகும்!
இல்லார் இருப்பதாய்க் கனவுகண்டு மகிழ்கிறார்!
இருப்போர் இருப்பைக் காக்கவேண்டுமே என்றதவிப்பில் உறக்கமின்றி கனவின்றி பதைக்கிறார்!
ஆணோ பெண்ணோ கருப்போ சிவப்போ
கற்றோரோ கல்லாரோ ஏழையோ செல்வந்தரோ யாராயினும் எந்நாடாயினும்
பேதங்கள் பார்க்காமல் வருவது கனவு!
பதினாறு தொடக்கத்தில் இளமையின் கனவுகள் துணைநாடியதாய்!
அவற்றினூடே
கருத்தாய் வாழ்விலுயர சிலருக்கு வரும் இலட்சியக்கனவுகள்!
திருமணக் கனவுகளைக் கடக்காத மனிதரென்று இங்கே யாருமில்லை!
அக்கனவு நிறைவேறாமல் உருவான முதிர்கன்னிகள் மற்றும் இளைஞர்கள் ஏராளமிங்கே!
குழந்தையின்
எதிர்காலம் பொன்மயமாய் விளங்கவேண்டும்
என்பதே பெற்றோரின் கனவு!
மாணவர்கள் நூறுசதம் வெல்லவேண்டுமென்பதே 
ஆசிரியர்களின் கனவு!
எனக்குமொரு கனவுண்டு!அக்கனவினிலே பனையுண்டு!
தேசமெங்கும் பனைவளம் பெருகவேண்டும்!
எங்கு திரும்பினாலும் என்  பனைமக்கள் இருக்கவேண்டும்

த.ஹேமாவதி
கோளூர்