ஆண்டி முதல் அரசர்வரை விரும்புவது அமைதி!
ஆணவமாய் வாழ்பவர்க்கு என்றுமில்லை அமைதி!
பொறுமையுள்ள
மனிதருக்கு என்றும் வாழ்வில் அமைதி!
அன்பிருந்தால் எவரையும் தேடிவரும் அமைதி!
வஞ்சனைகள்
மனத்திலிருத்திக்
கொண்டோர்க்கும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்க்கும்
கொடுஞ்சொல்லை நாவில் உதிர்ப்பவருக்கும்
கெட்ட பழக்கங்களில் உழல்வோருக்கும்
ஒழுக்கத்தை இழந்து
போதையின் பாதையில் செல்வோர்க்கும்
பேராசை கொண்டோர்க்கும்
சோம்பலிலே வீழ்ந்தோர்க்கும்
ஈன்றாரைக் கைவிட்டார்க்கும்
ஊக்கத்தைத்
துறந்தார்க்கும்
வாழ்விலே கல்லார்க்கும் இல்லார்க்கும்
என்றும் அமைதிஇல்லை!
த.ஹேமாவதி
கோளூர்