பனி பெய்யும் மார்கழியில்
பழமுதிர் சோலையிலே
நிழல் தரும் மரத்தோரம் நின்று,
நீங்காமல் பார்த்திருந்தேன்,,,
தனியொரு குணங்கொண்டு
தவம் பல செய்பவருக்கும்
அணி போல்
நீ வருவாய்
அன்றலர்ந்த மலர் போலே,,,
அணி போல்
நீ வருவாய்
அன்றலர்ந்த மலர்
போலே,,,
நின் திருவடிவேலும்
நீலமயில் தோகையுடன்
காண கண் கோடி வர
காத்திருந்தேன்
கூட்டத்துடன்,,,,,
ஆட்டம் போட்ட கூட்டமொன்று அரோகரா
சொல்லி வர
கேட்டதுமே துன்பமெல்லாம் ஓட்டமிட நான் கண்டேன்,,,
மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளில்
அழகான முகம் காண வந்தேனே,,,
அழகான செம்பொன் மயில் மேலமர்ந்த அலை வாயு கந்த முருகனே!
நீ!
அழகான செம்பொன்
மயில் மேலமர்ந்த அலை வாயுகந்த
முருகனே!
ஒரு நாளும் மறவேன் உன் திருநாமம் கண்டு
அறிவாலறிந்த அடியாரை,,,
அறிவாலறிந்து
னிருதாளிறைஞ்ச மடியாரிடைஞ்சல்
கலைந்தோனே!
நீ! யுன்னடியாரிடைஞ்சல்
கலைந்தோனே!!
முருகா!!!
பாலா,,,