Header Ads Widget

Responsive Advertisement

பனைகளும் என்கண்ணென்ற கணைகளும்



எங்கேனும் தொலைவில் பனை
ஒன்றேனும் கண்டாலே என் கண்ணிரண்டும் கணையாகமாறி
பனைநோக்கிப் பாயும்!
அடிமுதல் உச்சிவரை உயரத்தை அளக்கும்!பனைத்தண்டைச் சுற்றிசுற்றி பார்த்தேமகிழும்!
உயர்ந்திருக்கும் பனந்தண்டிடம்
விழியாலே மொழிபேசும்!
உனையீன்ற பனந்தாய் ஆரோ?
உன்னுடனே பிறந்த பனமக்காள் ஆரோ?
இவ்விடத்தே சுகமாய்த்தான் இருக்கின்றீரோ?
இடரேதுமுளதோ?மண்வளம் போதுமோ?
நீர்வளமுனக்குப் போதுமோ?
காற்றும் வெயிலும்
பறவைகளும்
உன்காலடியில்
அசைந்தாடும் பசும்புல் கூட்டமும்
உன்னோடு நட்போடு உறவாடுகிறார்களா?
அழகோவியமே!
என்கண்ணைக்
கணையாக்கும்  வல்லமையைப் பெற்றவளே! நீவாழ்க பல்லாண்டு!

த.ஹேமாவதி
கோளூர்