சில உண்மைகள் பொய்யாகவே வலம்
வருவதினால்....
பொய்யே மெய்யாகி
விடுகிறது....
மெய்யே பொய்யாகி விடுவதினால்...
பொய் மெய்யாகி விடுகிறது...
என்ன செய்ய!
சில அர்த்தமற்ற
சொற்களை
அர்த்தமாக்கும்போது...
அர்த்தமுள்ளவை அர்த்தமற்றுப்
போகிறது...
அர்த்தமற்ற வார்த்தைகளே
அர்த்தத்தை தரும்போது....
அர்த்தமுள்ள
நீ மட்டும் ஏன்?
புகலிடம் தேடிக்கொண்டே இருக்கிறாய்!
உனக்கான மகுடம் செய்யப்பட்டாகி விட்டது
நீ ஏன் தலையில் சூடிக் கொள்ள காலம் தாழ்த்துகிறாய்!
இதோ
உனக்கான பாதை
நட...
பிறரை நடத்திடு!
கரிசல் தங்கம்