Header Ads Widget

Responsive Advertisement

தண்ணீர் வண்டி




விடிய விடிய காத்திருந்தேன்,,,
தண்ணி வண்டியை
காணலையே,,,
வரிசை போட்டு நின்னாலும்
நான்,
வச்ச குடம்
இடம் ,
மாறலையே,,,,,,

கிழக்குந்தான் வெளுத்திருச்சு,,, விடிவெள்ளி மறைஞ்சிருச்சு,,,
பொடி நடையா நான் போறேன்
ஆற்றை தோண்டி ஊத்தெடுக்க,,,

தண்ணி வண்டி தண்ணி போட்டு தள்ளாடி நிற்கையிலே,,,
வீடு தேடி வந்திடுமா?
விளக்கம் சொல்லு சின்னவளே,,,,

ஆல மரம், புளியமரம் அத்தனையும் ஏங்கையிலே
மழை வேண்டி நானிருக்கான்,
மாரியாத்தா
கண் திறவேன்,,,

என்ன பஞ்சம் வந்தாலும் தண்ணீர் பஞ்சம்
வேண்டாமடி
மாரி,
மாறி மாறி
நீ பொழிய
மழை வெள்ளம் ஊர் சூழ, உன்
பேர் சொல்ல வேண்டுமடி,
இனி தண்ணி வண்டி வேணாமடி மாரி,
தண்ணி வண்டி வேணாமடி,,,,,

பாலா,,,