பேரண்டப் பிரபஞ்சத்தில்
அணு முதலாய் .
முடிவிலதாய்..
துகள் முதலாய் நேரிணிலே ..
வகைசெய்யும் ..இறை பெரிதே ..
பொறியாளர் ...
சிறுமலர் முதலாய் ...
கனி அதுவாய் ..
சுவை நிறையாய்...
வடிவெனவாய் ..
சூழ்ந்த மணம் நிகர்த்ததுவாய் ..
என் இறைவா ..
நீ அதுவாய் ...பொறியாளர் ...
பேராழி.. உயிர் முதலாய் ..
பெருங்காற்றின்..
இயங்கலதுவாய் ..
எரிமலையாய் ..
தழல் அதுவாய் ..
அதிர்வது வாய் ..
நிசப்தம் அதின் பேரொலியாய் ..
இறைவா நீ ...பொறியாளர் ...
மலை தந்தாய் ..
நதி தந்தாய் ..
மேடு செய்தாய் ...
சமன் செய்தாய ..
பல வகையாய் ..
உயிர் தந்தாய் ...
உயர்வான உயிரானாய் ..
யாருமானாய் ..
நானுமானாய் ..
இறைவா நீ ..பொறியாளர் ..
காட்சியானாய்..
களமும் ஆனாய் ..
தொண்டுமானாய் ..
இடையே நின்று ..
ஆடல் செய்தாய் ..
கருணை கொண்டாய் ..
காத்து நின்றாய் ...
இறைவா... நீ பொறியாளர்
அன்பு சொன்னாய் ..
சிலுவை கொண்டாய் ..
கண்ணன் ஆனாய் ..
கீதை சொன்னாய் ...
இஸ்லாத்தின் ..
இயல்பும் ஆனாய் ...
பௌத்தம் ஆனாய் ..
மெய்யறிவுமானாய் ..
யாவும் ஆனாய்...
இறைவா நீ.... பொறியாளர்
சிந்தை தந்தாய் ..
வார்த்தை தந்தாய் ..
நிலமும்போல பொறுமை
என்றாய் ...வடிவாக
சிலையாக ...சிந்தையிலே
எனைக்கொள் என்றாய் ...
என் நிலை அதுவும் ...
நீ தனி அறிவாய்...
அர்ப்பணிபபோ.. உன்னிடமே ...
பற்றற்றான் பற்றே
எமைத்தாங்கி நிற்கும் ...
இறைவா நீ பொறியாளர் ...
தெய்வானை,
மீஞ்சூர்.