நீ சப்தம் போடாமல் இருந்தால் உருவாகும் நிசப்தம்
இரவினிில் நிசப்தம்
அழகிய இனிமையான உறக்கம் தரும்
நடுநிசியினில் நிசப்தம் கிலியுண்டாக்கும்
கவிஞர்களுக்கோ நிசப்தம்
கற்பனை வளத்தை உருவாக்கும்
நோயாளிகளுக்கு நிசப்தம்
நோயைப் பாதி குறைக்கும்
மன அமைதி இல்லாதவர்க்கு
நிசப்தம் மன நிம்மதி தரும்
யோகா பயிற்சியின் போது நிசப்தம்
உடலையும் உள்ளத்தையும் வலிமைப்படுத்தும்
பல விதத்தில்
மாசுபடும் இந்த உலகத்தை நிசப்தத்தால் நிரப்பி
முடிந்தவரை ஒலி மாசைக் குறைப்போம்
தி.பத்மாசினி சுந்தரராமன்