Header Ads Widget

Responsive Advertisement

கனவுலகில் கவிதையெழுது!



நிலவில் நடைபயில
நித்திரை போதும் ;

சந்த
நயமிக்க  தமிழால்
சித்திரமும் கவிதை ஓதும்;

சிந்தித்தால் வானவில்லும்
கூந்தலைக்கோதும்;

சாத்திரத்தையும் சூத்திரத்தையும்
கூறி தடைசெய்ய நினைத்தால்
தமிழுக்காக அகிலமே
படைதிரண்டு மோதும்;

இவண்
அன்றும் இன்றும் என்றும்
தமிழே உயிர்மூச்சென

உயிரில் கலந்த தமிழுணர்வே
உருக்குலையாத தித்திக்கும் பேச்சென

வானவீதியில் நடைபயில
வண்ணத்தமிழே
அக்னி வீச்சென

ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்.