Header Ads Widget

Responsive Advertisement

பரிதிமாற்கலைஞர்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்

விளாத்திக்குளம் !

அங்கே 

கோவிந்தசிவனார்

லட்சுமி அம்மாள்

மகிழும் வண்ணம்

தவமகனாய்ப் பிறந்தவரைப் போற்றி வணங்குவோம்!

தமிழன்னை செய்தவத்தின் பயனே அம்மகன்!

மொட்டான மொழிதனை மலராக மலர்த்தியவன் தான்மலர்ந்து நெடுநாள் வாசம்வீசாமல்  இளம்பருவத்திலேயே

இம்மண்ணுலகைத் துறந்தவன்!

தனித்தமிழ் இயக்கம் கண்டு

தமிழுக்குப் புத்துணர்வூட்டியவன்

நாடகத்துறைக்கு மறுமலர்ச்சி தந்து

கலாவதியும் ரூபாவதியுமென இரட்டைச் சகோதரிகளைக் கொடுத்தவன்!

சூரியனை பரிதியாக்கி

நாராயணனை

மால்ஆக்கி

சாத்திரியை

கலைஞராக்கி தன்பெயரை

பரிதிமாற்கலைஞர்

என தனித்தமிழில்

மாற்றியவன்!

காலங்கள் புரண்டாலும் தமிழுள்ளவரைக்கும்

தன்பெயரால் நிலைத்து           வாழ்பவன்!


த.ஹே

கோளூர்