Header Ads Widget

Responsive Advertisement

நலம்; நலமறிய ஆவல்.


புன்னகையால் உனை உணர்த்திப் புது உறவாய் ஆனவளே(னே),

கண்ணசைவால் எனைக்கவர்ந்து காதல் மழை பொழிந்தவளே(னே), 

சொல்லழகால் மனம் திறந்து சொக்கிப் போக விட்டவளே(னே),

நடையழகில் உடையழகில் கிறங்கி நிற்க வைத்தவளே(னே),

காதலென்றால் என்னவென்று கதை கதையாய்ச் சொன்னவளே(னே),

மகிழ்ந்திருந்த நேரமெல்லாம் மகிழ்ச்சியிலே இணைந்தவளே(னே),

கலங்கி நின்ற நேரமெல்லாம் கண்ணீரைத் துடைத்தவளே(னே),உன் அழகால், உன் சிரிப்பால் மதிமயங்கச் செய்தவளே(னே),

மயங்கி நின்ற வேளையிலே மறந்துவிட்டுச் சென்றவளே(னே),

மறக்கவில்லை என அறிந்து

உறக்கமின்றித் துடித்தவளே(னே),

தயக்கமின்றி உள்மனதை உணர்த்திவிட்டுப் போனவளே(னே),

என் நலமறியும் விருப்பமதை நெஞ்சினிலே சுமப்பவளே(னே),

நலம்; நலமறிய ஆவல்,

நலம்; நலமறிய ஆவல்.


*சுலீ. அனில் குமார்.*