கண்ணுக்கெட்டாத தூரத்தில் இருக்கும்
கோள்களை ஆராயும் நாம்
நம் அருகில் இருக்கும்
மனித மனங்களை ஆராய மறந்து விட்டோம்
தனிக் குடும்பத்தை விரும்பி
கூட்டுக் குடும்பங்களை மறந்து ம்
விட்டோம் தொலைத்தும் விட்டோம்
அயல் நாட்டு மோகத்தை விரும்பி
நம் பண்பாடு நாகரீகங்களை மறந்து விட்டோம்
ஆங்கிலம் பேசும் ஆசையினால்
தமிழ் மொழியை மறந்தும் விட்டோம்
தமிழை வளர்க்காமல் விட்டு விட்டோம்
நம் நீராகர உணவை மறந்துவிட்டு
பீட்சா பர்கருக்கு மாறி விட்டோம்
உடலில் நோயையும் சேர்த்துவிட்டோம்
சாதி சாதியென்று
ஒருரோடொருவர் சண்டை போட்டு
நாம் மனித சாதி
என்பதை மறந்து விட்டோம்
அயல் நாட்டு அறிவியல் அறிஞர்களையும்
இலக்கியவாதிகளையும் புகழும்
நாம் நம்மூரில் இருப்பவர்களை மறந்துவிட்டோம்
சமூக சேவை செய்ய ஓடும் நாம்
கண்ணெதிரே இருக்கும் பெற்றோருக்குக
சேவை செய்ய மறந்து விட்டோம்
கல்லுக்கும் கட் அவுட்டுக்கூம்
பால் ஊற்றும் நாம்
அழுகின்ற அநாதை குழந்தைக்கு
பால் ஊற்ற மறந்து விட்டோம்
மறந்தவைகளை ஞாபகப்படுத்தி
மறக்காமல் இருப்போம்
இனி மறந்தவைகளை
தி.பத்மாசினி