ஆகாய மங்கை எப்போதும் சுமங்கலிதான்
ஞாயிற்றின் மஞ்சளை முகத்தில் பூசி
ஞாயிற்றின் கதிர்களை பட்டையாய் இட்டு
நிலவென்னும் பொட்டை வைத்து
எப்போதும் மங்களமாய் காட்சி அளிக்கிறாள்
நட்சத்திரங்கள் அவள் சிரிப்பில் பூத்த மலர்கள்
கோள்களெல்லாம் அவளின் செல்லப் பிள்ளைகள்
மேகங்கள் அவளின் பேரப் பிள்ளைகள்
பேரப் பிள்ளைகளை கண்ட மகிழ்ச்சியில்
ஆனந்தக் கண்ணீரை மழையாய் பொழிகிறாள்
வான்மகள்
தி.பத்மாசினி