Header Ads Widget

Responsive Advertisement

சுமங்கலி



ஆகாய மங்கை எப்போதும் சுமங்கலிதான்

ஞாயிற்றின் மஞ்சளை முகத்தில் பூசி

ஞாயிற்றின் கதிர்களை பட்டையாய் இட்டு

நிலவென்னும் பொட்டை வைத்து

எப்போதும் மங்களமாய் காட்சி அளிக்கிறாள்

நட்சத்திரங்கள் அவள் சிரிப்பில் பூத்த மலர்கள்

கோள்களெல்லாம் அவளின் செல்லப் பிள்ளைகள்

மேகங்கள் அவளின் பேரப் பிள்ளைகள்

பேரப் பிள்ளைகளை கண்ட மகிழ்ச்சியில்

ஆனந்தக் கண்ணீரை மழையாய் பொழிகிறாள் 

வான்மகள்


தி.பத்மாசினி