மண்குளிர
விண்அதிர
மழைவேண்டும்!
கண்குளிர
மண்செழிக்க
மழைவேண்டும்!
பொன்மணியாய்
நெல்விளைய மழைவேண்டும்!
தேன்சுரக்கும் பூத்தேடி ஏங்கும்
வண்டினங்கள் மகிழ செடிகள்
செழித்து வளர்ந்து
பூக்கள் மலர்ந்திட
மழை வேண்டும்!
தவிக்கும் மக்கள்
தாகம் தணித்திட
மழைவேண்டும்!
எரியும் கதிரில்
சருகாய் உலரும்
மரத்தின் கிளைகள்
துளிர்த்து வளர்ந்திட
மழைவேண்டும்!
வற்றிய நீர்நிலை
ஊற்றெடுத்துப் பொங்கிடவே
கனத்தமழை கட்டாயம் வேண்டும்
த.ஹே
கோளூர்