Header Ads Widget

Responsive Advertisement

காணவில்லை



தென்றலுமே புயலாகுது 

மன்னவா,,,

தேகம் கூட பகையாகுது

என்னவா,,,

இரவில்,

நிலவும் 

புறம் பேசுவதை

சொல்லவா,,,

இப்படியே என் வாழ்வு 

செல்லவா

உலகில் நான் 

ஏன் பிறந்தேன்? இப்படியே என் வாழ்வு 

செல்லவா,,,


பிடித்த மீனை 

விட்ட கதை சொல்லவா

உன்னை பிரியத்திலே மங்கையிவள் அள்ளவா,,,

தொடுத்த பூவை தலையிலே நீ 

சூட்ட வா,,,,

தொடுத்த பூவை தலையிலே நீ 

சூட்ட வா,,,

உன்னை கண்களுந்தான் காணவில்லை

மாயவா,,,


நினைக்கும் 

போது 

நீயுமிங்கு மன்னவா,,,

நெருங்கி வந்து கதைகள் பேசி மகிழ வா,,,,

கணக்கு போட்டு நான் இனியும் வாழவா?

கடந்த நாளை மனதில் 

வைத்து பேசவா,,,

நான், 

கடந்த நாளை மனதில் 

வைத்து பேசவா,,,


தென்றல் 

போல 

நான் இப்போ மாறவா,

உன் திசை 

நோக்கி

சிறகடித்து பறக்கவா,,,

உலகெல்லாம் சுற்றியுன்னை தேடவா?

தேடி,

உரிமையோடு 

உன்னோடு

சேரவா!


வரும் 

வழியை 

பார்த்து 

நானும் 

நிற்கவா,,,?

தபால் 

வருமென்று

ஏக்கத்திலே

என் அவா,,,

தினம்,

பிரிவென்ற உறவினிலே 

நிற்கவா,,,?

என்னை,

ஏன் 

படைத்தாய்

நான் வணங்கும்

இறைவா,,,,!

தினம்

சிரித்து

நீயும் 

பார்க்காதே மறைவா!


பாலா,,,