Header Ads Widget

Responsive Advertisement

அம்மா..


அம்மா...! 

என்ற ஒற்றைசொல்

எவ்வளவு அழகான..

அன்பான...உயர்வான

உயிரான...வார்த்தை !


பிறந்த உடன் சொன்னதும்

உயிரை வலியோடு

முடிக்கும் போது சொல்வதும்

அம்மா ..அம்மா ..அம்மா.


உன் அன்பின் கதகதப்பும்

வலிக்காத தண்டனையும்

இனி  யாராலும் தரமுடியாது.


கட்டெரும்பு கடித்த போதும்

காதல்  போனபோதும்

அம்மா என்று சொல்லிதானே

ஆறுதல் அடைந்தேன்..!


நீ..இங்கே இல்லாமல் 

போனதாய்

ஊர் சொல்கிறது..

சொல்லிவிட்டு போகட்டுமே.

ஆனால்..


இன்னமும் என் 

காலைநேர கனவில் வந்து..

அழகாக்குகிறாய்..அம்மா..என்

நாட்களை அழகாக்குகிறாய்...


கடவுளை நான் 

கான நினைக்கும

போதெல்லாம் 

அன்பாய்.

அழகாய்..

பாசமாய்..

நேசமாய்

கன்முன்னே தோன்றி மறைவது

நீதானே அம்மா...நீதானே...!!

அப்துல் முத்தலிப்