**
சரசரவென அம்புகளைத் தொடுத்து வீழ்த்தினான் அவளை அவன்!
வீழ்த்தப் பட்ட அவளோ
தன்னிரு வாள்களை வாகாய் வீசி சிறையகப் படுத்தினாள் அவனை!
யுத்தம் பெரும்யுத்தமாய்
மாறிய போதும்
இரத்தம் சிந்தவில்லை! காயங்கள் ஏற்படவில்லை!
இன்பமே விளைந்தது!காரணம் இருவருக்குமிடையே
நடந்தது காதல் யுத்தம்!
அம்பென்றது அவன் பார்வை! வாளென்பது அவளிரு கூர்விழிகள்!
த.ஹேமாவதி
கோளூர்