Header Ads Widget

Responsive Advertisement

தமிழன்றோ* இனிதில் முந்தும்!

கடலினிலே அலைகள்தான் துள்ளும்துள்ளும்!
கடலோர நண்டுகளோ மனதை அள்ளும்!
கொடும்பனியைக் கதிரவன்தான் கொல்லும்கொல்லும்
கிள்ளைகளோ நம்பேச்சைத் திருப்பிச் சொல்லும்!
நெடுவாழை பழக்குலையைத் தள்ளும்தள்ளும்!
நீள்விழியர் பேரழகோ மனதைக்  கிள்ளும்!
மடலவிழ்ந்த மலர்கள் தேன் சிந்தும்சிந்தும்!
மொழிகளிலே *தமிழன்றோ* இனிதில் முந்தும்!

த.ஹேமாவதி
கோளூர்
(இது நான் 1996 ல் எழுதிய கவிதை)