Header Ads Widget

Responsive Advertisement

விழுதுகள்


ஓர் மரம் விழுந்து விழுந்து விழுதுகளை உருவாக்குவது

தன்னை காக்க அல்ல 

தன் கிளைகளை தாங்கிப் பிடிக்கவே

அதுபோல் பெற்றோரும் தம் பிள்ளைகளை விழுதுகளாய் உருவாக்குவது

தன்னைக் காக்க அல்ல

இந்த நாட்டை தாங்கிப் பிடிக்கவும்

உடன் பிறந்தோரை தாங்கிப் பிடிக்கவும்

உண்மையை தாங்கிப் பிடிக்கவும்

நேர்மையை தாங்கி பிடிக்கவும்

அன்பை தாங்கி பிடிக்கவும்

தள்ளாத வயதில் தடுமாறும் முதியோர்களை தாங்கிப் பிடிக்கவும்

வறுமையில் வாடுவோரின் வாட்டம் போக்கவும்

அனிதைகளுக்கு ஆதரவு கரம் நீட்டவுமே 

தம் பிள்ளைகளை  விழுதுகளாய் உலகத்திற்கு அளித்துள்ளார்கள்


தி.பத்மாசினி