Header Ads Widget

Responsive Advertisement

அழகு எது? பேரழகு எது?



தனிமனித ஒழுக்கமே அழகு.
தனிமனித ஒழுக்கத்தை பத்துபேர்
போற்றினால் பேரழகு.

தனிமனித ஒழுக்கமின்றி
தடம்பெயர்ந்தால் அவமானம்.
தனிமனிதஒழுக்கமின்றி
தடம்பெயர்ந்தோரை
புகழ்ந்தேற்றுவோருக்கு பேரவமானம்.

நன்மைக்குத்  துதிபாடு
நன்மையே விளையும்.
தீமைக்குத் துதிபாடினால்
திருப்பி திருப்பி அடிக்கும்.

குற்றம் செய்வோரைவிட
குற்றம் செய்வது தெரிந்தும்
புகழ்ந்தேற்றுவோரே
கொடூரமான குற்றவாளிகள் ஆவர்.
தீமைக்குத் தூபமிடும் துதிபாடுவோராலே
உலகம் தீமையானதாக மாறுகிறது.

குற்றம்குறைகளைச் சுட்டிக்காட்டும்
மனிதர் எவரோ
தப்பிற்குத் துணைபோகமாட்டார்.

குற்றங்குறையெனத் தெரிந்தும்
கண்டும்காணாததைப்போல
செல்வோரிடம்
எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

அழகும் பேரழகும்
தனிமனித ஒழுக்கமே
நிர்ணயம் செய்கிறது.
அக அழகுதானென
அழகேயென ஆராதிப்பது அழகல்ல.

தனிமனித ஒழுக்கத்திற்கு
எதிராக நடப்பின்
சந்ததியினரையே சபித்திடும்.

அறம்
பொருள்
இன்பநெறிகளின்படி
அர்த்தமுள்ள வாழ்வு வாழ்ந்தால்
பேரழகு எனும்
மணிமகுடம் தானாகவே வரும்.

இப்போது உரைக்கிறேன்.
அழகே உன்னை ஆராதிக்கிறேன்.
பேரழகே உன்னை நேசிக்கிறேன்.

இவண்
என்றும் தமிழோடு
ம.பிரான்சிஸ் ஆரோக்கியம்,
மேட்டூர் அணை 1