மாற்றுதினாளியும்
தனிமையும்
தாங்க முடியா வேதனையை
தங்க நகை புன்னகையால்
தவிர்த்ததுண்டு
பிறருக்குமட்டும்..
இன்பமாய்
தோற்றம் கொண்டு
துடிக்கிதே ஒவ்வொரு நாளையும் கண்டு
தனிமைதான் எனது துணையோயென
அழைத்தபோது
தனிமையும் தயங்கி நின்றது
தனிமை சில காலம்தான்
இனிக்குமே
நீ
எப்போதும்
என்னுடன் இருக்கிறாயேயென்று
என்னையும் நிராகரித்தது
தனிமை..
யாரை துணைக்கழைத்தாலும்
நம்மோடு
இருப்தில்லை உயிரானவர்கள் ஒருபோதும் கடைசி வரை துணையாய் இருப்பதில்லை..
கடைசி வரையும்
சுவர்களும் என்னைத்தாங்கும்
ஊன்றுகோலும்
என்
தனிமையைப்
போக்கவும்
என்
வலியை நீக்கவும்
உயிற்ற ஜடமாக இருந்தாலும்
உயிரான என்
உயிராய்
தாங்கும் உறவே
உன்
உள்ளத்தில்
ஊனமில்லை
அதனால் நானுனக்குப் பாரமில்லை
இனி எவரும் தேவையில்லை..
மாற்றுத்திறனாளியின்
வாழ்க்கைக்கு மறுபிறவி ஊன்றுகோலே
உறுதுணையாய்
இப்பிறவியில்..!
கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..