நட்பு நந்தவனத்தின்
வேர் அன்பு
மனங்களின் சங்கமம்
சுமைதாங்கியாய்
வருத்தத்தில் துயர்
துடைக்கும் ஒரு விரல்
என்னை மீட்டெடுக்கும்
ஆறுதலாய் தலை கோதும் தாய்
மடி சாய்க்கும் அன்னையாய்
கை பிடித்து
மவுனமாய் உன் மனம்
தரும் ஆறுதல்
என்னை ஆளுகின்ற
தோழமையே
பிறவி தோறும்
தொடர வேண்டும்.
அம்பை சங்கரி