மனிதத் தோட்டத்தின் புத்தம்புது மலர்!
கவலையைப் போக்கிடும் இசைக்கருவி!
ஈரினங்கள் இணைந்து தீட்டிய
ஓரின ஓவியம்!
கால்கொண்டு நடக்கும் இன்பக்காவியம்!
கைகால் முளைத்த
தித்திக்கும் செங்கரும்பு!
மூழ்காமல் பெற்றெடுத்த வலம்புரிமுத்து!
வீட்டைக் கோயிலாக்க வந்த
தெய்வக்கொழுந்து!
ஆரத்தழுவி உச்சிமுகர்ந்து முத்தமிட எண்ணவைக்கும்
தங்கநிலவு!
கைகளேந்தி மகிழும் மலர்க்குவியல்!
மடியில் தவழும்
வானிலவு!
த.ஹேமாவதி
கோளூர்