Header Ads Widget

Responsive Advertisement

மனிதா.. கொஞ்சம் மனிதம் தா..


உயிரோடு வாழும் மனிதப்பிறவிகளே, கொஞ்சம் செவிமடித்து கேளுங்களே..

வாழும் தருணம் மிகக்குறைவே சொற்ப காசுக்கும் சொற்ப வாழ்வுக்கும் வஞ்சனை செய்யாதே

அற்பமாய் ஆகிவிடும்

ஆயுளும் போய்விடும்..


மனித மனம் அன்பின் இருப்பிடம்

அதை ஆறா ரணமாய்

ஆக்கிவிடாதே..


அக்கரையும் இரக்கமும்

மனித குலத்தின் இரு அங்கம்

அதை ஈனச்செயலால்

அசிங்கமாக்காதே

வாழ்வை தொலைக்காதே

அடுத்தப்பிறவியில்

அக்கரையோடு வாழ்வதைவிட

இப்பிறவியில் இரக்கத்தோடு வாழ்

மனிதனே கொஞ்சம்

திருந்து

அதுதான் மனிதத்திற்கு

மருந்து..!


கரிகாலி.கவி. பெ.கருணாநிதி..