மாசிலா நீர் அமுதாகும்!
மாசிலா நிலம்
சொர்க்கமாகும்!
மாசிலா காற்று
உயிர்சக்தியாகும்!
மாசிலா ஆகாயம்
நல்லமழையாகும்!
மாசிலா தழல்
ஆக்கசக்தியாகும்!
இயற்கையே
இப்படியெனில்
மனிதா கேள்!
மனத்துக்கண் நீ
மாசிலன் எனில் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவாய்!
என வள்ளுவர் இயம்புகிறார்!
தீய எண்ணங்களைக் களைந்து எவ்வொரு மாசும் இல்லாத மனதோடு இருந்தால்
அகம் ஒளிரும்!
அதன் தொடர்ச்சியாய் முகம் ஒளிரும்!அதனோடு சேர்ந்து
சொல்லும் சொற்கள் குளிரும்!
கரங்கள் நல்லதே செய்யும்!
இந்த நிலையில் நீ மற்றவர்க்கு சொல்லும் வணக்கம் ஆகிடுமே
*மாசிலா வணக்கம்*
இவ்வணக்கத்தால் உனது நல்லெண்ணம் மற்றவர்க்கும் கடந்துப் போகும்!
கடவுச்சீட்டாய் வணக்கம் நல்லதைக் கடக்கும்!
அனைவருக்கும் இனிய *காலை மாசிலா வணக்கம்*
த.ஹேமாவதி
கோளூர்