Header Ads Widget

Responsive Advertisement

நன்றி சொல்லுகிறேன்! இந்நன்நாளிலே!

களனியிலே ஏர்பூட்டி!
ஏரோடு உடல் கூட்டி!
பத்துகால் பாய்ச்சலிலே!
பசி எனும் நோய் தீர்க்க!
பரணியதன் தேவைதனை!
படி அளக்கும் ஆண்டவனுக்கு நிகரானவனாய்!
வியர்வையினையும் உரமாக்கி!
நெல்மணி!...
என்
வீடு சேர்த்த உழவனுக்கும்!
உழவனுடன் கூடி கொடுத்த ஞாயிறுக்கும்!
ஞாயிறுடன் தோல் சேர்த்த காளையனுக்கும்!
நன்றி மறவா தமிழனின்
நன்றியினை உழவன்!.
ஊர் சேர்ந்து
பாடிடும் போது!
உணவு உண்ணும் நானும்!
நன்றி மறவா
அந்த உழவனுக்கு
நன்றி சொல்லுகிறேன்!
இந்நன்நாளிலே!

----இப்படிக்கு நான்.   ஜோ ரெக்ஸ்-------