Header Ads Widget

Responsive Advertisement

வெண்ணிலவுக்குத்தான்



மண்ணில் வந்த பெண்ணிலவல்ல விண்ணில் வந்த பெண்ணிலவள்
வெண்ணிலவை பாடிவிட்டோம்,,,
அதைவிடியும் வரை தேடி விட்டோம்,,,
மேகம் என்னும் திரைக் கூட்டம் மேற்கு வரை கடத்தி விட்டான்,,,
விடியும் வரை காத்திருந்தேன்,,,
விண்ணையே பார்த்திருந்தேன்,,,
என்னையே பார்த்தவள்,,,
எதற்கும்,
இன்று போய் நாளை வா என்றாள்,,,
இன்று கூட பார்த்திருந்திருந்தேன்,,,
இறங்கி வர ஆசைப்பட்டாள்,,,
வேகமாய் மேகம் என்று,
ஓடி வந்து திரையை போட்டான்,,,
ஒற்றை விழிமறைத்து ஓரமாய் அவள் பார்க்க,
வெட்ட வெளி பொட்டலிலே
காலை வரை காத்திருப்பேன்,,,
நித்தம் நித்தம் நான் பார்க்க, நினைத்து வந்த வேளையிலே,,,
சத்தம் போடாமல் அவளுக
மேகம், சடசடனு மழை பொழிந்துடுவான்,,,
ஒட்டு மொத்தமாய் நனைத்து விட்டு, என்னைப் பார்த்து அவள் சிரிக்க,,,
மேகமதும் விலகிவிடும்,,,
அவள் முகங்காண சோகமதும் பறந்து விடும்,,,
இப்படியே என் வாழ்வு இறுதி வரை ஓடி வர, உறுதியாய் உடனிருப்பேன் என்று சொல்லி மறைந்து விட
கண்டது தான் வானிலே அமாவாசை,,,✍🏻
😁🙏🏻💐


பாலா,,,,,