Header Ads Widget

Responsive Advertisement

ஏறு தழுவுதல்


காலம் மாறலாம் ...ஆனால்
கனவுகள் மாறுமோ? அதன்
கனங்களும் குறையுமோ?
வங்கக்கரையோரம்.....
வந்ததே ஆழிப்பேரலை
கடலிலிருந்து கரைக்கல்ல..

கரைகாணா மனித ஆழிப்
                          பேரலையே!
ஜாதி அன்று ஜதிகள் சொல்
                           லவில்லை!
மதங்களன்று மத்தளம்
               கொட்டவில்லை!
ஏழையெவரும் எழுந்தோட
                               வில்லை!
பணம்படைத்தோரும் பதுங்கி நிற்கவில்லை!
கருவைத்தாங்கியவள்
கையில் சிசுவைஏந்தியவள்
கைப்பிடியில் பிஞ்சுகளை
இறுகப்பற்றியவள்
இறைவனைத்தேடும் அகவை
                                   யிலே
இருப்பவள் என எத்தனைப்
                                 பேர்
ஒன்று திரண்ட காரணம்
                     மறக்குமோ?
வீர இளைஞர் வாகைசூட
பின்புலமாய் நின்ற நிஜம்
                        மறையுமோ?
காவலர்கள் இரும்புகரங்கள்
துருவேறி நின்ற கதையும்
                      மறைந்திடுமோ
குளிர் காற்று தண்டுவடம்
                                 வரை
தாண்டவமாடிட நிஜமும்
                       மறையுமோ?
ஆண்மகன் பேதம் மறந்து
ஆள்தெரியா இருளிலும்
கண்ணியம் போற்றி..........
கண்களில் உயிரை ஏந்தி
தவமாய்த்தவமிருந்து
பெற்றுத்தந்தது விடுதலை
ஜல்லிக்கட்டுக்கா இல்லை
தமிழ்நாட்டுக்கா?தமிழனின்
தரத்தை தரையிலிட்டு
நசுக்க நினைத்த எத்தரின்
நாசகார எண்ணத்தை
நசுக்கிட எழுந்தவரின்
வாய்தனை உடைத்தெழும்
வீரம்படைக்குக் கிடைத்த
வெற்றியின் முழக்கமே
இன்று ஏறுதழுவுதலாய்,
மஞ்சுவிரட்டாய்
மாறுஜென்மம் எடுக்கவைத்
                         தான் என்
மானத்தமிழன்! பாரம்பரியத்துக்கு உயிர்
                         தந்த
தங்கத்தமிழன்! இன்று நாம்
நடத்தும் ஒவ்வொரு
நீகழ்வின் நிதர்சனமே
  தமிழ்வாழும் வரை உன்
பெயர் வஆழும்