Header Ads Widget

Responsive Advertisement

செதுக்கும் உளி!

நான் காகிதம்
எழுதுகோல் என்னுள் கவிதையைச் செதுக்கும் உளி!

நான் நிலம்
ஏரின் முனை
என்னில் தானியம்
கொழிக்கும் உளி!

நான் துணி
ஊசியின் முனை
என்னை
ஆடையாய்ச் செதுக்கும் உளி!

நான் மனம்
கொடுநாவின் முனை
என்னை பக்குமாய்ச் செதுக்கும் உளி!

நான் காதலன்
உன் விழிமுனை
என்னை
உன் கணவனாய்ச் செதுக்கும் உளி!

அனைத்தையும் கேட்ட கல்
சொல்லியது
நான் கல்
இரும்பின் கூர்முனை எனது உளி!
அதன் செதுக்கலால்
நான் படும் அவதிகளை ஒருபோதும்
வாய்விட்டுச் சொல்லியதில்லை!
என்னைப் போல்
உளியின் வலிகளைத் தாங்குவார் உளரோ? எனச் சொல்லி அமைதியானது!

த.ஹே
கோளூர்