அன்பே
உன்னைக் கண்ட நாள்முதலாய்
என்விழிகளைக்
காணவில்லை!
தேடிக் கண்டுக்கொண்டேன்!
உன்னிரு விழித்தொட்டிலிலே
என்விழிகள் மழலையாய்க் கண்வளர்வதைக் கண்டேன்!
பதிலுக்கு என்இதயத் தொட்டிலிலே தாலாட்ட உன்இதயத்தைத் தந்துவிடு!
நாமிருவரும் சேர்ந்து காதல்தொட்டிலிலே
நம்அன்பைத் தாலாட்டிச் சீராட்டி வளர்ப்போமா கண்ணே!
த.ஹேமாவதி
கோளூர்