அடர்ந்த பசுமைநிறக் காட்டினிலே
மூங்கில் மரத் தோப்பினிலே
கூடு கட்டி வசித்திருந்தேன்
இயற்கை வந்து பாதியை அழிக்க
மீதியைத் தான் மனிதன் பறிக்க
போக இடமும் இல்லாமல்
போக வழியும் தெரியாமல்
பறந்து வந்த வேளையிலே
தென்னந்தோப்பும்
கண்ணில் பட
அதிலொன்றை தேர்ந்தெடுத்து
கூடுகட்டி என் பிள்ளைகளை வளர்த்துவந்தேன்
நான் இரைதேட போகையிலே
யாரு வந்து அழைத்தாலும்
வெளியே வாராதே
உன்னைச் சுற்றி இருக்குதப்பா
குள்ளநரிக் கூட்டமொன்று
தாய் பேச்ச கேக்கலன்னா
நீ தனியாயிடுவ
அவர்களுக்கு இரையாயிடுவ
சொன்ன பேச்ச கேட்டபிள்ளைக்கு
அன்னை ஊட்டுகிறாள் ஊணை
தி.பத்மாசினி