Header Ads Widget

Responsive Advertisement

அன்னை ஊட்டுகிறாள் ஊணை

அடர்ந்த பசுமைநிறக் காட்டினிலே
மூங்கில் மரத் தோப்பினிலே
கூடு கட்டி வசித்திருந்தேன்

இயற்கை வந்து பாதியை அழிக்க
மீதியைத் தான் மனிதன் பறிக்க

போக இடமும் இல்லாமல்
போக வழியும்  தெரியாமல்

பறந்து வந்த வேளையிலே
தென்னந்தோப்பும்
கண்ணில் பட
அதிலொன்றை தேர்ந்தெடுத்து
கூடுகட்டி என் பிள்ளைகளை வளர்த்துவந்தேன்

நான் இரைதேட போகையிலே
யாரு வந்து அழைத்தாலும்
வெளியே வாராதே
உன்னைச் சுற்றி இருக்குதப்பா
குள்ளநரிக் கூட்டமொன்று

தாய் பேச்ச கேக்கலன்னா
நீ தனியாயிடுவ
அவர்களுக்கு இரையாயிடுவ

சொன்ன பேச்ச கேட்டபிள்ளைக்கு

அன்னை ஊட்டுகிறாள் ஊணை


தி.பத்மாசினி