Header Ads Widget

Responsive Advertisement

யாருக்கு அவள் சொந்தம்?

அவள்  நினைத்தாள்

தான் *அவனுக்குமட்டுமே*

முழுவதும் சொந்தமென்று!

ஆனால் அவளுக்கு தெரியாது

அவளின்  முகம் நிலவுக்கும்

கண்கள் கயலுக்கும்

இதழ்கள் பவளத்திற்கும்

பற்கள் ஒளிர்முத்துகளுக்கும்

கூந்தல் கார்முகிலுக்கும்

கைகளிரண்டும்

இளமூங்கில் தண்டுக்கும்

விரல்கள் சம்பங்கிமலருக்கும்

சிற்றிடை மெல்லியநூலுக்கும்

நடையோ தென்றலுக்கும்

உடல்எடையோ

பாலின்நுரைக்கும்

பார்வை வேலுக்கும்

புன்னகை பொன்னகைக்கும்

பேச்செல்லாம் தித்திக்கும் தேனுக்கும் பாதங்கள் இலவம்பஞ்சுக்கும்

சொந்தம் என்பதையே மறந்து!


த.ஹேமாவதி

கோளூர்