Header Ads Widget

Responsive Advertisement

தெரிந்தும் தெரியாமல்



நிரபாதியும் தண்டிக்கப்படலாம்
பொய்சாட்சி இருந்தால்

குற்றவாளியும் தப்பிக்கலாம் தவறு செய்யாதிருந்தால்

மணலைக் கயிராய்த் திரிக்கலாம்
மந்திரவாதியாய் இருந்தால்

யாவருக்கும் அன்னையாகலாம்
அன்னை தெரேசா போல்
அன்பும் கருணையும் இருந்தால்

தெய்வத்தையும் காணலாம்
உண்மையான பக்தி இருந்தால்

மனிததனும் தெயவ்மாகலாம்
மமற்றவரின் பசியைப் போக்கினால்

வாழ்க்கை சொர்க்கமாகும்
நல்ல புரிதல் இருந்தால்

பிறந்த பயனை அடைவர்
தம் குழந்தையின் மழலைச்சொல் கேட்பவர்

அரசனும் ஆண்டியாகலாம்
தவறான ஆட்சி புரிந்தால்


ஆண்டியும் அரசனாகலாம்
நல்ல அதிர்ஷ்டம்  இருந்தால்

விதியையும் வெல்லலாம்
மதி இருந்தால்

அனைவருடனும் இருக்கும் தெய்வம்
தாய் தந்தையர்

சில பிள்ளைகள் செய்யும் பாவம்
பெற்றோரை முதியோர் இல்லத்திற்கு அனுப்புதல்

வாசமில்லா ரோசா கூட
எதற்கோ பயன்படுகிறது

உன்னை பயனுற வளர்த்த
பெற்றோரை பயனில்லையென்று அனாதையாக்காதே

பெற்றோரின் பாசம் பெரிதா
நம் பாவம் பெரிதாயென்று
அவர்களுடன் போட்டிபோடாதே


தி.பத்மாசினி