Header Ads Widget

Responsive Advertisement

விவசாயி

முகச்சாயம் அழித்து, விவசாயம் கொழி,,,

நான் இல்லையெனில் நீயேதடா?

நாடேதடா?

அதை, 

மேடையிலே சொல்ல மறந்தாயடா,,,

தம்பி!

வீரு கொண்டு நான் செய்த விவசாயத்தால்,

பேரை மட்டும் வாங்கி கொண்டாய் 

நம் 

சமுதாயத்தால்,,,

ஆறு கூட நின்று விடும் இரு கரையிலே,,,

வயலுக்கு,

விடியுமுன்னே நான் ஓட வைகரையிலே,,, 


விளைந்துவரும் பயிர்களும் சிரித்திடும் 

போது,,, 

எங்கள் உறவுதனை 

காண வரும், கதிரும் அப்போது,,,

ஏர் பிடிக்கும் உழவ னென்றால் ஏளனமா?

அவன் கால் 

பதிக்க வில்லை

யென்றால்

உன் நாடகம் நடந்திடுமா?

இறங்கி வந்து கோட்டு சூட்டை அவிழ்த்து விடு,,,,

தம்பி,

மாட்டிரெண்டை ஏர் முனையில் பூட்டி விடு,,,

பாரம்பரியம் நமது என்று காட்டி விடு,,,

பகட்டுக்கு அடிமையில்லையென

பறைசாற்றி விடு,,,,

எட்டுத்திக்கும் ஏர்பூட்டி உழுதிடுவோம்,

தம்பி, 

நம் மக்கள் 

பசியாற உணவிடுவோம்.

கட்டுக்கோப்பாய் நாம் வாழ விவசாயம்,

அதை காத்திட நீ அழித்து விடு முகச்சாயம்,,,✍🏻


பாலா